திருச்சி: உதவி செய்வதுபோல் வந்து ஜிவிதா என்ற 2 வயது குழந்தையை கடத்தி சென்ற பர்தா அணிந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அரக்கோணத்தை சேர்ந்த சரசு கணவருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து வேலூர் வந்துள்ளார். வேலூர் பேருந்துநிலையத்தில் சரசுவை சந்தித்த பர்தா அணிந்த பெண் திருச்சி செல்வதாகக் கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். திருச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த போது பால் வாங்கி தருவதாக குழந்தையை அந்த பெண் ஏமாத்தி திருடி சென்றுள்ளார்.