×

கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை....மீண்டும் சவரனுக்கு 31 ஆயிரத்தை தாண்டியது: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,008க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,876க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 30காசுகள் உயர்ந்து ரூ.51.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில் விறுவிறுவென உயர்ந்த தங்கம் விலை நடப்பாண்டு தொடங்கிய சில நாட்களிலேயே, 31 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது. அதன் பின்னர் சற்றே குறைந்த தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ஆபரணத்தங்கத்தின் விலை 31 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து ரூ.31,008 -க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ரூ.14  அதிகரித்து  ரூ.3.876 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம்  ரூ.51.30 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ. 51, 300 -க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை  ஏற்றம் கண்டு வருகிறது. சவரனுக்கு ரூ. 31,000-க்கு மேல் தங்கம் விற்கப்படுவதால்  சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Gold prices, again, exceed 31 thousand, customers, dissatisfaction
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு,...