புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், முதன் முறையாக ஜம்முவில் அம்மாநில கவர்னர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.நாடு முழுவதும் நேற்று குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அது ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த பிரிப்புக்கு முன்பு இரு யூனியன் பிரதேசங்களிலும் நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஜம்முவில் துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். காஷ்மீரில் நடந்த மற்றொரு விழாவில் கவர்னரின் ஆலோசகர் பரூக் கான் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.