டெல்லி: பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதிய யோசனை தமிழகத்தில் உதித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தோன்றியதுபோல் எண்ணற்ற யோசனைகள் புதிய இந்தியாவிற்கு வலுசேர்த்து வருகின்றன. எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை மூலம் தீர்வுகாண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.