அம்பத்தூர் அருகே விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் விரிசல்; பயணிகள் அவதி

சென்னை: சென்னை அடுத்த அம்பத்தூர் அருகே விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தண்டவாள விரிசல் காரணமாக திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கமாக செல்லும் விரைவு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு செல்லும் பிருந்தாவன், திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: