மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று திறக்கப்பட்டது. இங்கு வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்காவிட்டால் விளக்கம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதி பேசினார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு வரவேற்றார். ஐகோர்ட் கிளை நீதிபதி ஜெ.நிஷாபானு நீதிமன்றத்தை திறந்து வைத்தார். விழாவுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி டி.ராஜா தலைமை வகித்து பேசியதாவது: இந்த நீதிமன்றம் செயல்படத் துவங்கியதும், போக்சோ வழக்குகளே இல்லை என்ற நிலைக்கு வர வேண்டும். பெண்களை தெய்வமாக பார்க்கிறோம். தாய் தான் நமது முதல் தெய்வம். இதேபோல் ஒவ்வொருவருக்கும் அவரது கல்வி தான் சிறந்த தெய்வமாக இருக்கும். நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கையில் தான் உள்ளது.
மதுரையில் போக்சோ நீதிமன்றம் திறப்பு: ஓராண்டுக்குள் விசாரணை முடிக்காவிட்டால்... ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரிக்கை
- போகுசோ நீதிமன்றம்
- மதுரை
- விசாரணை
- கிளை
- உயர் நீதிமன்ற நீதிபதி
- திறக்கும் போக்கோ நீதிமன்றம்: ஒரு வருடத்திற்குள் ஒரு முழுமையான விசாரணை