வத்தலக்குண்டு: கொடைரோடு அருகே கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (58). இவர் நேற்று தனது குடும்பத்துடன் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக, திருநெல்வேலிக்கு காரில் புறப்பட்டார். மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், கொடைரோடு அருகே சடையாண்டிபுரம் பிரிவில் மாலை 3.30 மணி அளவில் சென்றது. அப்போது மதுரையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார், சாலையின் குறுக்கே சைக்கிளில் கடக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (60) என்பவர் மீது மோதி தடுப்பை உடைத்துக் கொண்டு, எதிரே வந்த வெள்ளையப்பன் கார் மீது மோதியது.