பிரபல டி.வி. நடிகை சேஜல் சர்மா தற்கொலை: மீரா ரோடு வீட்டில் தூக்கில் தொங்கினார்

மீரா ரோடு: பிரபல இந்தி டி.வி. நடிகை சேஜல் சர்மா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்தவர் சேஜல் சர்மா(25). சினிமா மற்றும் டி.வி. நிகழ்ச்சிகளில் நடிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேஜல் சர்மா மும்பைக்கு வந்தார். அவர் தானேயின், மீரா ரோட்டில் உள்ள ராயல் நெஸ்ட்  சொசைட்டி கட்டிடத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.  

இந்த நிலையில், நேற்று முன்தினம் சேஜல் சர்மா தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சேஜல் சர்மாவின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.ேசஜல் சர்மா எழுதியிருந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணத்துக்காக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: