ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். காஷ்மீரில் அவந்திப்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து பாதுகாப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினரும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.