×

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். காஷ்மீரில் அவந்திப்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பதுங்கி இருப்பதாக  பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து பாதுகாப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினரும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மீது பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜெய்ஷ்-ஏ-முகமது எனும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தளபதி உட்பட 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Tags : terrorists ,security forces ,district ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Avantipora, terrorists shot dead
× RELATED அனைத்து கட்சியினர் வாக்கு சேகரிப்பு...