ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருவள்ளுவர் நகர் பகுதியில் சமீபகாலமாக குரங்குகளின் அட்டகாசம் அதிக அளவு இருந்து வருகிறது. கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அள்ளிச்சென்று விடுகிறது. சமைத்து வைத்திருந்தால் பாத்திரத்துடன் உணவை எடுத்து சென்று விடுகிறது. வீடுகளுக்குள் புகுந்த குரங்குகளை விரட்ட முயன்றால் அது எதிர்த்து வந்து மிரட்டுகிறது. சில நேரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளையும் கடித்து காயப்படுத்தி விடுகிறது.