திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே அரசு பஸ் டயரில் சிக்கி பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். திருக்கோவிலூர் அருகே கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் மகன் பிரதாப்குமார். இவரது தாய், தந்தை இருவரும் மும்பையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். பிரதாப்குமார் உறவினர் வீட்டில் தங்கி புத்தூர் அரசு ேமல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து புத்தூர் பகுதியில் இருந்து கீழக்கொண்டூர் செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.