உடுமலை, நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. வாக்காளர் பெயர் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதியோர் பலர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி (ஜன. 25), மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி தேர்தல் ஆணையம் சார்பில் நடந்தது.