×

ஆண்டிப்பட்டியில் ஊழியர்கள் 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம்: CCTV காட்சி வெளியீடு

தேனி:  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கூட்டுறவு பண்டக சாலை மேனேஜராக பணியாற்றி வரும் 3 பேரை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அரிவாளால் வெட்டும் பதைபதைக்கும் CCTV கேமரா காட்சி வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு பண்டக சாலையில் பணியாற்றிவரும் மேனேஜர் கோட்டசாமி, சேல்ஸ் மேனேஜர் பெரியசாமி, மற்றும் மேனேஜர் முருகேசன் ஆகிய 3வரும் இன்று காலை 9 மணிக்கு தனது கடையை திறப்பதற்காக வந்துள்ளனர். அங்கு ஆண்டிபட்டியை சேர்ந்த நாகராஜன் மகன் அழகு ராஜா என்பவர் கூட்டுறவு பண்டக சாலைக்கு முன்பு கரும்பு கடைபோட்டு வியாபாரம் செய்துவந்துள்ளார். அப்போது 3 மேனேஜரும் தனது கடை முன்பு அமரக்கூடாது என்று அவர்களை வலியுறுத்தினர்.  அப்போது ஆத்திரமடைந்த அழகு ராஜா என்பவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். 

அந்த காட்சி அருகே உள்ள டீக்கடையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த 3வரையும் மீட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இதனைத்தொடர்ந்து அழகுசாமியிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவர் தனது தகப்பனாரை 2 முறை வெட்டி, கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள், பலஇடங்களில் அழகுசாமி அரிவாள் வைத்து கொண்டு திரிவதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மனநலம் குன்றிய மருத்துவமனையில் சேர்க்கும்படி அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டனர்.

Tags : Cinnamon incident ,CCTV , Antiparty, staff, sickle, incident, CCTV scene, release
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...