கோவை: கோவை தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஒருநாள் சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் முக்கிய இடங்களை பார்வையிட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் படிப்பில் சிறந்து விளங்கும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஒருநாள் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டடத்தில் அசோகபுரம், இடிகரை, குரும்பபாளையம், ஆத்துப்பொள்ளாச்சிம் பன்னிமடை, கிணத்துக்கடவு, சொக்கம்பாளையம், மதுக்கரை, வெள்ளமடை, வீரபாண்டி, மாக்கினாம்பட்டி உள்ளிட்ட 15 அரசு பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் சுற்றுலா: முக்கிய இடங்களை பார்வையிட்டனர்
- சுற்றுப்பயணம்
- அரசாங்க பள்ளி மாணவர்கள்
- பள்ளி மாணவர்கள்
- தமிழ்நாடு சுற்றுலாத் துறை: நாட்டு சுற்றுலாத் துறை அரசு