மதுரை: மதுரையில் முதன்முறையாக சமையல் செய்யும் ரோபோ இயந்திரத்தின் செயல்விளக்கம் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டப்பட்டது. சமையல் செய்யும் ‘ரோபோ’ இயந்திரம் மூலம், மதுரையில் உணவு சமைக்கப்பட்டு காட்டப்பட்டது. முற்றிலும் இயந்திர முறையில் இயங்கும் இந்த ஆட்டோமேட்டிக் ரோபோவை வடிவமைத்துள்ள குழுவில் ஒருவரான சரவண சுந்தரமூர்த்தி கூறும்போது, ‘‘இந்த இயந்திரம் மூலம் ரசம் முதல் பிரியாணி வரை 800 வகையான உணவுப் பொருட்களை தயாரிக்கலாம்.