கோவை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி, கே.சி.பழனிசாமியிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கே.சி.பழனிசாமி அவரது இணையதளம், லெட்டர் பேட் ஆகியவற்றில் அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. கட்சிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அதிமுகவில், தான் தொடர்ந்து இருப்பதாக செயல்பட்டதை கண்டித்து முத்து கவுண்டன் புதூர் அதிமுக ஊராட்சி தலைவர் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் காலை 4.30 மணிக்கு லாலிசாலையில் உள்ள கே.சி.பழனிசாமி வீட்டிற்கு காவலர்கள் சென்றனர்.