×

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு: உத்திரபிரதேச அரசு அதிரடி அறிவிப்பு

லக்னோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்கனையருக்கு தலா 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மற்ற ஆண்டுகளை விட 2020ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தனித்துவம் கொண்டதாக உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் இந்தியா சார்பில் பங்குபெறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் வெல்லும் உத்திரபிரதேச மாநில வீரர், வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா 4 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது உத்திரபிரதேச ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வெல்வோருக்கு தலா 2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும் உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.

Tags : Olympic ,Tokyo ,Player ,reward players , Tokyo, Olympics, gold, Rs 6 crore, Uttar Pradesh government, announcement
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...