×

காரைக்காலில் உள்ள மன்மத ஈஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு

காரைக்கால்: காரைக்காலில் உள்ள மன்மத ஈஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதியன்று ஞானாம்பினை அம்மன் ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, சிலை திருட்டு குறித்து கோயில் நிர்வாகத்தினர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புகாரளித்து 4 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என காவல்துறையினர் மது கோயில் நிர்வாகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


Tags : temple ,Karaikal ,Idol ,Manmadha Ishwar , Karaikal, Manmadha Ishwar Temple, Imbon Statue, Theft
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...