புதுடெல்லி: திகார் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சீராய்வு, கருணை மனுக்களுக்கு சிறை நிர்வாகம் தேவையான ஆவணங்களை வழங்கவில்லை என அக்ஷய் குமார் சிங், பவன்குப்தா ஆகியோர் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.