×

வாக்கின் மதிப்பை மக்கள் உணர வேண்டும், மக்களிடையே அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: தலைமை செயலாளர் சண்முகம்

சென்னை: வாக்கின் மதிப்பை மக்கள் உணர வேண்டும், மக்களிடையே அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று தலைமை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் பேசிய அவர், சாதி, மத பாகுபடுகளை களைய வேண்டும் என்றும், எல்லோரும் சமம் என்ற மனநிலைக்கு மக்கள் வரவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், கலத்திற்கு ஏற்றார் போல் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு யுக்திகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Chief Secretary Shanmugam, National Voter Day, Awareness
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...