சென்னை: குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர்கள், அரசியலமைப்பு உருவாக சட்டம் இயற்றிய மேதைகளை நினைவு கூர்வோம் என்றும், நம்முடைய ஆற்றல் முழுவதையும் ஒருங்கிணைத்து நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும் எனவும் ஆளுநர் வாழ்த்து கூறியுள்ளார்.