சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது: டிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார். எம்ஜிஆர் என நினைத்து கட்சி ஆரம்பித்தார். அப்போதே அவரது வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியைவிட்டு ஒதுங்கிக்கொள்வது நல்லது.