×

டிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது: புகழேந்தி பேட்டி

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது: டிடிவி.தினகரனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் ஒரு இடம்கூட கிடைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார். எம்ஜிஆர் என நினைத்து கட்சி ஆரம்பித்தார். அப்போதே அவரது வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியைவிட்டு ஒதுங்கிக்கொள்வது நல்லது.

கடந்த 2 மாதமாக டிடிவி.தினகரனை காணவில்லை. இதுவரை வெளியில் தலைகாட்டாமல் உள்ளார். அவரது அரசியல் அஸ்தமனமாகிவிட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ரூ.1260 கோடி கைமாறியுள்ளதாக சிபிஐ வழக்கு விசாரணை நடந்து வருகிறது. டிடிவி.தினகரன் கட்சியில் நான் சேர்ந்தது மிகப்பெரிய தவறு. இதற்காக வருந்துகிறேன். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Tags : DDV.Dinakaran ,end , DTV.Dinakaran, Political Life, Decision, Praise, Interview
× RELATED காய்ந்த புற்களை தீயில் எாிப்பு-சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு