×

பிரச்னைகளை திசை திருப்பவே பெரியார் பற்றி ரஜினி பேசுகிறார்: வேல்முருகன் குற்றச்சாட்டு

தஞ்சை: ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரச்னைகளை திசை திருப்பவே பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய பேச்சை நடிகர் ரஜினி ஆரம்பித்து உள்ளார் என வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும். தமிழில் நடத்தப்படாத பட்சத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தங்களது கோரிக்கையை வலியுறுத்துவோம். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயத்தை அழித்து நிலங்களை பாலைவனமாக்கும் திட்டமான ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை தற்போது பேசி வருகிறார். ஹைட்ரோ கார்பன், குடியுரிமை திருத்த சட்டம், பொதுத்தேர்வு பிரச்னைகளை திசை திருப்பும் வகையில் அவர் பேசி வருகிறார். இவரை பா.ஜ.க.வினர் பேச வைக்கிறார்கள் என்றார்.

Tags : Rajini ,Periyar ,Velmurugan , Problem, distraction, Periyar, Rajini, Velmurugan, charge
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு