ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். திருவள்ளூர் கமலாலய திருக்குளத்தில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தீர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.