வாக்கு எண்ணிக்கை, தனி அதிகாரி நியமனம் உள்ளிட்ட நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷாலும், நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டதால் நடிகர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று தீர்ப்பு வழங்குகிறார். நீதிமன்ற தீர்பை பொருத்து நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது இன்று தெரியவரும். நாளை வரவுள்ள தீர்ப்பை எதிர்பார்த்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் உள்ளனர்.

Related Stories: