×

தெலங்கானாவில் மீண்டும் கொடூரம் காரில் 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம்

திருமலை: தெலங்கானாவின் அமீன்பூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி ரேஷ்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரேஷ்மி நேற்று காலை 9 மணிக்கு வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரை பிடித்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர், அமீன்பூர் வனப்பகுதிக்கு சென்று 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு  தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் மதியம் 2 மணியளவில் தப்பி சாலைக்கு வந்த ரேஷ்மி, போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அமீன்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அமீன்பூர் வனப்பகுதிக்கு சென்று ரேஷ்மியை மீட்டனர். ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் டிஷா பலாத்கார சம்பவ வடு மாறுவதற்குள் தெலங்கானாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Tags : gang rape ,Telangana , Telangana, Torture, 16-year-old girl
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து