காஷ்மீர் டிஎஸ்பி.க்கு 15 நாள் என்ஐஏ காவல்

ஜம்மு: குடியரசு தினவிழாவில் நாசவேலைகள் செய்ய திட்டமிட்டிருந்த ஹிஸ்புல் தீவிரவாதிகள் இருவரை தனது காரில் அழைத்துச் சென்ற காஷ்மீர் டிஎஸ்பி தேவிந்தர் சிங் வாகன சோதனையில் சிக்கினார். இதனால் தேவிந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தவிந்தர் உட்பட 5 பேரும் நேற்று ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரின் முகத்தை துணியால் மூடியபடி, குண்டு துளைக்காத வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இவர்களிடம் 15 நாள் விசாரணை நடத்த என்ஐஏ அனுமதி கோரியது. இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டு, 15 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

Related Stories: