ஜம்மு: குடியரசு தினவிழாவில் நாசவேலைகள் செய்ய திட்டமிட்டிருந்த ஹிஸ்புல் தீவிரவாதிகள் இருவரை தனது காரில் அழைத்துச் சென்ற காஷ்மீர் டிஎஸ்பி தேவிந்தர் சிங் வாகன சோதனையில் சிக்கினார். இதனால் தேவிந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தவிந்தர் உட்பட 5 பேரும் நேற்று ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரின் முகத்தை துணியால் மூடியபடி, குண்டு துளைக்காத வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இவர்களிடம் 15 நாள் விசாரணை நடத்த என்ஐஏ அனுமதி கோரியது. இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டு, 15 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.