நாகர்கோவில்: ‘‘அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சர்ட்டிபிகேட் தர வேண்டிய தேவையில்லை’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாக கூறியுள்ளார். மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் எதுவும் செய்யவில்லை, அவர் அமைச்சராக இருந்ததே வேஸ்ட்தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ண் நேற்று நாகர்கோவிலில் அளித்த பேட்டி: அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சர்ட்டிபிகேட் தர வேண்டிய அவசியம் இல்லை. இரு பெரிய நிகழ்வுகளில் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு என்ன செய்தார் என்பதை ஜெயலலிதா பேசியுள்ளார். கூட்டணி தர்மம் ஒன்று உள்ளது. அதனால் நான் மவுனமாக உள்ளேன். 2021 தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.