×

பெரியாரை பற்றி ரஜினிக்கு தலையும், வாலும் தெரியாது: நாமக்கல்லில் துரைமுருகன் பேட்டி

நாமக்கல்: பெரியாரை பற்றி நடிகர் ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் எம்எல்ஏ., நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆகியும், விவாதப் பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார். பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த்க்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொன்னது போல, ரஜினிகாந்த் பேசாமல் இருந்தால் அவருக்கு நல்லது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இது ஒரு திறந்த மடம். எச்.ராஜாவின் கேள்விக்கு எல்லாம் பதில் கூறி, என்னுடைய தரத்தை நான் தாழ்த்திக்கொள்ள மாட்டேன். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.


Tags : Duraimurugan ,Periyar ,Namakkal ,Rajini , Interview with Periyar, Rajini, head and tail, Namakkal
× RELATED திமுக என்பது கொள்கை கூடாரம் அதை...