கரூர்: கரூரில் அதிகளவில் புகை கக்கி சென்ற ஆட்டோவை நிறுத்தி அமைச்சர் எச்சரித்து அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் வெண்ணெய்மலையில் மாநில அளவிலான ஜூடோ மற்றும் சிலம்ப போட்டிகள் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அந்த ஆட்டோவில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை கவனித்த அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் அந்த ஆட்டோவை நிறுத்தும்படி கூறினார்.