விபத்துகளில் பலி சோனியா ஆறுதல்

அமேதி: உபி.யில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தொண்டர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியுடன் இரண்டு நாள் பயணமாக இங்கு வந்திருந்தார். நேற்று முன்தினம், உச்சாகர் தொகுதி எம்எல்ஏ. அஜய் பாலின் வீட்டிற்கு சென்று அவரது மகன் மறைவுக்கு ஆறுதல் கூறினர். 2வது நாளான நேற்று, தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் நடந்த பயிற்சி முகாமிற்கு செயலாளர் பிரியங்காவுடன் சோனியா காந்தி சென்றார். அப்போது, பராமசி கிராமத்தின் விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories: