கொல்கத்தா: இந்திய வில்வித்தை சங்கத்தின் மீதான தடையை உலக வில்வித்தை கூட்டமைப்பு விலக்கி கொண்டுள்ளதால் இந்திய வீரர்கள் தேசிய கொடியுடன் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம். தேர்தல் நடத்தாதது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய வில்வித்தை சங்கத்தின் மீது உலக வில்வித்தை கூட்டமைப்பு 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால தடை விதித்தது. அதனால் இந்திய வில்வித்தை வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் , இந்திய கொடியுடன் பங்கேற்க முடியவில்லை. நவம்பர் மாதம் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த 21வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியுடன் நடுநிலை வீரர்களாக பங்கேற்றனர்.