மெல்போர்ன்; ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புழுதிப்பயுலுடன் கனமழை பெய்ததால் ஆற்றில் பழுப்பு நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு புழுதிப்புயலுடன் கனமழை பெய்தது. மெல்ேபார்ன் நகரில் 23 மில்லி மீட்டர் அளவுக்கு கனமழை பெய்தது. விக்டோரியாவில் 1996ம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக மிக குளிரான நாளாக இது இருந்தது. வழக்கமாக இந்த மாதத்தில் பெய்யும் மழையை விட இது இருமடங்காக இருந்தது. புழுதி கலந்து பெய்த மழையால் மெல்போர்ன் நகரமே சேறும் சகதியுமாக காட்சியளித்தது.