சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க முடியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் அடிமட்ட தொண்டன்கூட கொடி கட்டிய காரில் வர முடியும், நாங்கள் எல்லாம் மிட்டா மிராசு கிடையாது. முதல்வர் சொன்னதின் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக அவரே உள்ளார். அதிமுகவில் கடைகோடி தொண்டன் கூட பதவிக்கு வரமுடியும்.