துபாயில் இருந்து திருச்சிக்கு 2 கிலோ தங்கம் கடத்திய சென்னை வாலிபர் கைது

ஏர்போர்ட்: துபாயில் இருந்து திருச்சிக்கு, 2 கிலோ தங்கம்கடத்தி வந்த சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து திருச்சிக்கு கடந்த 14ம் தேதி ஏர்இந்திய விமானம் வந்தது. ரகசிய தகவலின் பேரில் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த யூனுஸ் (36) என்பவர் கொண்டு வந்த இறைச்சி கடையில் பயன்படுத்த கூடிய நவீன இயந்திரத்தில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதுவும் காப்பரில் கலந்து இருந்தது.

இதனிடையே, தொடர் விடுமுறை என்பதால், தங்கத்தை பிரித்து எடுக்க முடியவில்லை. இதனால், நேற்றுமுன்தினம் மாலை ரசாயன பவுடரை கொண்டு தங்கத்தை பிரித்தெடுக்க ஆரம்பித்தனர். நள்ளிரவில் பணி முடிவுற்று ₹79 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக யூனுஸ் கைது செய்யப்பட்டார்.

Related Stories: