சென்னை: அமைச்சர் வேலுமணி மீதான முறைகேடு புகார் பற்றி நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டரை வழங்கியதில் குறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.