சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு: அசாமைச் சேர்ந்த இளைஞர் கைது

விருதுநகர்: சிவகாசி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளி மகள் ராதா (8, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர், அருகில் உள்ள கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

ஜன.20-ல் காணாமல் போன சிறுமி அடுத்த நாள் காலை வீட்டின் அருகே முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். அவள் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக போலீசார் குற்றவாளிகள் யார்?, என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே வழக்கு தொடர்பாக 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூசம் அலி என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரிடம் 3 நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம்அலி என்ற இளைஞரை தனிப்படை போலீஸ் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைதான இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: