சென்னை: தேர் திருவிழாக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளது. தேர் திருவிழா விபத்துகளை தடுக்க 2012-ல் உருவாக்கப்பட்ட விதிகள் கடைபிடிக்கப்படுவது இல்லை என மனுதாரர் புகார் தெரிவித்து இருந்த்தார்.