புதுடெல்லி: இந்தியாவின் எதிரிகள் சொத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 9,400 கட்டிடங்களை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டை விட்டு ஓடி சென்று பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களின் கட்டிடம், நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களும் எதிரிகள் சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள எதிரிகள் சொத்துக்களை மத்திய அரசு கைப்பற்றி விற்பனை செய்து அந்த தொகையை அரசு நிதியில் சேர்ப்பது வழக்கமாகும். அவ்வகையில் இந்தியாவின் எதிரிகள் சொத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 9 ஆயிரத்து 400 கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் எதிரி சொத்துகள் விற்பனையை மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்ட அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.