கேரளா: எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்டது. எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் ஓடையில் வீசப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை கேரளா அழைத்துச் சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.