திண்டுக்கல் அருகே ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளரை தாக்கிய 4 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற அதிகாரி டேனியல் மகளை திருமணம் செய்து தருமாறு சுரேஷ்குமார் என்பவர் தொந்தரவு செய்துள்ளார். சுரேஷ்குமாருக்கு மறுப்பு தெரிவித்த டேனியலை காரில் சென்றபோது வழிமறித்து தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: