×

நிர்பயா குற்றவாளிகளுடன் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் 4 நாட்கள் சிறை காண வேண்டும்: கங்கனா ரனாவத் பேட்டி

புதுடில்லி : நிர்பயா குற்றவாளிகளுடன் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள் என நடிகை கங்கணா ரனாவத் பேசி உள்ளார். டில்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மாறி மாறி தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகியன நிராகரிக்கப்பட்டு விட்டதால் பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை திகார் சிறை நிர்வாகம் கவனித்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த வாரம் மீடியாக்களுக்கு பேட்டி அளித்த மனிதஉரிமைகள் அமைப்பின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளிகளை சோனியா மன்னித்ததை போன்று, அவரை முன்னுதாரணமாககக் கொண்டு நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என கேட்டிருந்தார். வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் இந்த கருத்திற்கு நிர்பயாவின் தாய் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்திடம் இந்திரா ஜெய்சிங் கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த கங்கணா, நிர்பயா குற்றவாளிகள் இருக்கும் சிறையில் அவர்களுடன் சேர்த்து இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள். இவரை போன்ற பெண்களால் தான் அரக்கர்களும் கொலைகாரர்களும் உருவாக்கப்படுகிறார்கள் என ஆவேசமாக பதிலளித்தார். கங்கணா, பல்வேறு சமூக பிரச்னைகளிலும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Indira Jaisingh ,jail ,convicts , Nirbhaya guilty, lawyer Indira Jaisingh, jail, Kangana Rawat
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!