சென்னை: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்கள் பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து, 2019 டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி பனங்காட்டு படை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். பனங்காட்டுப்படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 2008ம் ஆண்டு உதயமான தூத்துக்குடி நகராட்சியின் மேயர் பதவி, பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து 2011ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின் படி 2021ம் ஆண்டு வரை மேயர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.