×

தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு விற்றவர் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான ராஜேஷ் என்பவர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. கியூ பிரிவு துணை சூப்பிரண்டு தாக்கல் செய்த மனுவில், ராஜேஷ், அதிக பணம் வாங்கிக்கொண்டு, போலியான ஆவணங்கள், புகைப்படங்களை வைத்து தீவிரவாதிகளுக்கு 200 சிம் கார்டு விற்பனை செய்துள்ளார். எனவே இவருக்கு  ஜாமீன் வழங்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.


Tags : terrorists ,SIM card seller ,militants , Terrorists, simcard, bail plea dismissed
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...