ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரத்தில் நேற்று காலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அதிமுக தக்க நேரம் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது, அவரது சொந்த கருத்தாகும். நடைபெறாத ஒரு விஷயத்தை கூறி, மக்களை ஏன் ரஜினி திசைதிருப்ப பார்க்கிறார் என தெரியவில்லை. அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய 4 தலைவர்களுக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும், நாங்கள் அதை கண்டித்து குரல் கொடுப்போம். ரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ரஜினி விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிமன்ற நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம். ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது’ என்றார்.

Related Stories: