கோவை: கோவையில் தான் பறித்தது ‘கவரிங் நகை’ என்று தெரிந்ததால் ஆத்திரமடைந்த திருடன் மூதாட்டியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மனைவி குமுதவல்லி (52). இவர், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல வேலைகளை முடித்துவிட்டு அங்குள்ள தியாகி சண்முகாநகர் வழியாக நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென குமுதவல்லியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்றார். குமுதவல்லியும் கவரிங் நகைதானே என்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.