லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை‌

வருஷநாடு: தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சோலைமலை. இவரது மகன் பரமசிவம், கடந்த 2008ல் விபத்தில் இறந்துவிட்டார். அதற்கான சான்றிதழ் பெற அப்போது கண்டமனூர் விஏஓவாக இருந்த சுப்பிரமணியிடம் (64), சோலைமலை விண்ணப்பித்தார். அதற்கு அவர் ₹2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஏஓ சுப்பிரமணியை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தேனி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், லஞ்சம் பெற்ற விஏஓ சுப்பிரமணிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: